Saturday, February 1, 2020

மனமிருந்தால் மார்க்கம்!

Status 121

நாம் எவருக்கும் மறைமுகமாகவோ நேர்முகமாகவோ மனதிற்கும் உடலுக்கும் துன்பம் இழைக்கக் கூடாது. தேவை உள்ளவர்களுக்கும் துன்பத்தால் வருந்துபவர்களுக்கும் உடல் ஆற்றல், அறிவு ஆற்றல், பொருட்கள் இவற்றைக்கொண்டு இயன்றவரை உதவி செய்ய வேண்டும்.

-வேதாத்திரி மகரிஷி

ஒளி நம் கண்களுக்கு கூசும் பொழுது இமைகள்  உடனே தானே மூடிக்கொள்ளும். நாம் உடுத்தி இருக்கும் ஆடைகள் நம்மையும் அறியாமல்
 நழுவும் பொழுது நம் கைகள் உடனே தானே சரி செய்து கொள்ளும். இதுபோல பிறர் கஷ்டங்களையும் துன்பங்களையும் காணும்பொழுது நம்மையும் அறியாமல் அவர்களுக்கு உடன் உதவும் மனப்பான்மை வர வேண்டும். மனமிருந்தால் மார்க்கம்உண்டு.

- Victory King (VK)

No comments: