Tuesday, February 18, 2020

ஆஹாரம்!

Status 137

ஆஹாரம் என்றால் நாக்கால் சாப்பிடுவது மட்டுமல்ல. பஞ்ச இந்திரியங்களுக்கும் ஒவ்வொரு ஆஹாரம் உண்டு. பல காட்சிகளைப் பார்க்கிறோம். இது கண்ணுக்கு ஆஹாரம். பலவிதமான பாட்டு பேச்சுகளை கேட்கிறோம். இது காதுக்கு ஆஹாரம். இப்படி நாம் அநுபோகம் பண்ணுகிற தெல்லாம் நமக்கு ஆஹாரம் தான். இதில் எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும். மனதைக் கெடுப்பவை யாக இருக்கக் கூடாது.

- ஸ்ரீ காஞ்சி பெரியவர்

காதிற்கு இனிய கீதம் மற்றும் சத்தான விஷயங்கள், கண்களுக்கு குளுமையான இயற்கை காட்சிகள், நுகர்வதற்கு பூக்களின் நறுமணம், உடலிற்கு இளம் தென்றல் காற்று இவை அனைத்தும் நமக்கு புத்துணர்ச்சியையும் புது பொலிவையும் கொடுத்து மகிழ வைக்கும்.

-Victory king (VK)

No comments: