Sunday, February 23, 2020

நல்வினையும் தீவினையும்!

Status 142

கல்வியறிவில்லாத மனிதருக்கு கற்றவர்களின் சொற்கள் துன்பம் தரும். அறத்தில் விருப்பம் இல்லாதவருக்கு தர்மமே துன்பமாகும். மெல்லிய வாழைக்கு தான் ஈன்ற காயே எமனாகும்.

- ஔவையார்

அடுத்தவர்களுக்கு தீவினை செய்தே வாழ்ந்து வரும் ஒருவரை நாம் திருத்த முயற்சித்தால் அவர் செய்வதே நியாயம் என்று வாதித்து தான் திருந்தவே மாட்டார். ஆனால் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தான் திருந்த நினைத்தால் அப்பொழுது அவரைச்சுற்றி ஒருவரும் இருக்க மாட்டார். பைத்தியத்தின் நிலைதான் வரும். எனவே நாம் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே நல்லவற்றையே செய்து வாழ்நாள் முழுவதும் மகிழ்ந்து வாழ்வோமே!

-Victory king (VK)

No comments: