Wednesday, February 12, 2020

கருத்துப் பரிமாற்றம்!

Status 131

நீங்கள் யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால் நீங்கள் அடுத்தவர் பேச்சை கேட்பதைவிட நீங்கள் சொல்வதில்தான், அதாவது நீங்கள் சொல்வதை அடுத்தவர் கேட்க வேண்டும் என்ற ஆவலில் தான் அதிகமாக இருப்பீர்கள். நீங்கள் நினைத்துக் கொள்ளலாம், அடுத்தவர் உங்கள் பேச்சை மிகவும் சுவாரசியமாக கேட்கிறார் என்று. அவரும் உங்களைப்போல தன் எண்ணங்களை உங்கள் முன் இறக்கவே  ஆவலுடன் இருப்பார்.

- ஓஷோ

நாம் ஒருவரிடம் நம் கருத்துக்களை பரிமாறும் பொழுது  அடுத்தவரை ஈர்க்கும் வண்ணம் அந்த கருத்தை கூறி அதற்கு அடுத்தவருடைய கருத்தை அவர் சொல்லும்பொழுது நிதானமாக கேட்டால் கருத்து பரிமாற்றத்திற்கு பண்பும் பயனும் கிடைக்கும். முயற்சித்து தான் பார்ப்போமே!

- Victory king (VK)

No comments: