Thursday, February 20, 2020

அன்பின் வலிமை!

Status 139

மானுடன் ஒருவன் மிக்க கோழைப்பட்ட நெஞ்சமோ, மிக்க கல் நெஞ்சமோ படைத்தவனாக இருக்க கூடாது. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னுடைய பாங்குகளை அவன் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வெறுப்பு விஷமாக வடிவெடுக்கிறது. அன்பின் வலிமை மிகவும் பெரிது. வீழ்ந்தவனை மீட்டெடுக்க வல்லது.

- பீஷ்மர் ஞானோபதேசம்

கோழை என்பது ஒரு பயத்தின் அறிகுறி தான். அதுபோல கல்நெஞ்சம் என்பதும் பயத்தின் அறிகுறியே. அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த தைரியமில்லாமல் உள்ளடக்கி வைப்பதன் மூலம் முகத்தில் ஏற்படும் அழுத்தம்தான். இவைகளை உடைத்தெரிய அன்பினால் மட்டுமே முடியும். எனவே நாம் நம்முள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தி அனைவரையும் அரவணைத்து வாழ்ந்தால் மிகவும் தைரியசாலியாகவும் சாதனையாளர்களாகவும் திகழ்வோம். அன்பினால் சாதிக்க முடியாது ஒன்றுமில்லை என்பதை உணர்வோம்.

- Victory king (VK)

No comments: