Wednesday, February 19, 2020

வாழ்க்கை அறம்!

Status 138

செல்வதைப்போல வலிமையுடையது இல்லை. கல்வியைப் போல ஒருவனுக்கு உற்றதுணை வேறு எதுவுமில்லை. வறுமையைப் போல துன்பமாவது வேறு எதுவும் இல்லை. இரப்போர்க்கு இல்லையென்று சொல்லா மனதைப் போல வளமையானது எதுவுமில்லை.

-நான்மணிக்கடிகை

செல்வச் செருக்கால் அடாத செயல்களை செய்து வாழ்பவனை விடவும், கல்விச் செருக்கால் மமதை கொண்டு மற்றவர்களை மதிக்காது வாழ்பவனை விடவும் வறுமையிலும் அன்போடும் பண்போடும் இருந்து துன்பத்தை துச்சமென எதிர்கொண்டு தனித்தன்மையுடன் வாழ்பவர்களே சாலச் சிறந்தவர்கள். இவருடைய அன்பும் பண்பும் இவரை அரவணைத்து வாழ்க்கையை வளமாக்கும்.

-Victory king (VK)

No comments: