Tuesday, February 4, 2020

தர்ம சிந்தனை

Status 124

ஒரு மாமரத்தை பார்த்து குழந்தைகள் மாங்காய் வேண்டும் என்று நினைப்பார்கள். தச்சு ஆசாரிகள் இந்த மரத்தின் பலகை நன்கு உபயோகப்படும் என்று நினைப்பார்கள். வெய்யிலில் இருந்து  வந்தவர்கள் நிழல் கிடைத்ததே என்று சந்தோஷப்படுவார்கள்.

- இந்து தர்ம சாஸ்திரம்

இதில் மூவரது எண்ணங்களும் நியாயமானதே. ஆனால் மரமோ, ‘ குழந்தைகளும் பாதசாரிகளும்  நினைப்பது மகிழ்ச்சிதான். ஆனால் தச்சு ஆசாரியின் எண்ணம் சரி என்றாலும் தன்னை வெட்டிவிட்டால் மற்றவர்களுக்கு பயனில்லாமல் போய்விடுவோமே. எனவே நாம் அதிக அளவில் காய்கனிகளை கொடுத்தால் தன்னை  வெட்ட மாட்டார்கள். நாம் அனைவருக்கும் பயன்படுவோம் என்று நினைக்குமாம். அதுபோல நாம்  நம்மால் முடிந்தவரை தர்ம சிந்தனையோடு வாழ்ந்தால் அது நம்மை மட்டுமல்ல நம்  சந்ததியினரையும் சிறப்பாக வாழ வைக்கும்.

- Victory King (VK)

No comments: