Friday, February 14, 2020

எதிர்பார்ப்பு!

status 133

எதையும் எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் எதிர்பார்ப்பு பரபரப்பையும், ஏமாற்றத்தையும் அளிக்கும். நீங்கள் எதை அனுபவிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை அனுபவித்தே ஆகவேண்டும்.

- சுவாமி சிவானந்தா

இன்பமும் துன்பமும் சேர்ந்த கலவைதான் வாழ்க்கை. இன்பத்தை மட்டுமே ஒருவர் நாடும் பொழுதுதான் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி இறுதியில் அவமானத்தைச் சந்திக்க நேரிடுகிறது. துன்பத்தில் இருந்து ஒருவர் விடுபட்டு வரும் பொழுதுதான் இன்பத்தின் முழுமையை காணமுடியும். வெயிலில் வாடி வதங்கி வரும் ஒருவர் ஒரு மரத்தடி நிழலில் இளைப்பாறும் பொழுது அதுதான் அவருக்கு சொர்க்கம். ஆனால் அதே மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஒருவர் ஓர் இலை கூட ஆட வில்லையே காற்றுக்கு என்று வருத்தப்படுவார். எனவே இன்பம் வரும் பொழுது இறுமாப்பில் ஆடாமலும் துன்பம் வரும் பொழுது துவண்டு விடாமலும் நாம் வாழ்க்கையை கடத்திச் சென்றால் மகிழ்வோடு வாழ்வோம்.

-Victory king (VK)

No comments: