Thursday, February 27, 2020

இனிமையான சொல்!

Status 145

யானை மீது பாய்ந்து உருவும் அம்பானது பஞ்சுப் பொதியில் பாயாது. நீண்ட கடப்பாரைக்கு பிளவாத கருங்கல் பாறையானது பசு மரத்தின் வேருக்குப் பிளந்து கொடுக்கும். அவ்வாறு கடுமையான சொல்லானது இனிமையான சொல்லை வெற்றி கொள்ளாது.

-ஔவையார்

கடுமையான சொற்கள் என்பது கோபத்தின் வெளிப்பாடே. அது எதிர்வினை கொண்டு எதிராளியின் எதிர்மறை செயலுக்கு வித்திட்டு விடும். விளைவு நாம் அமைதியைக் எடுத்துக்கொள்வதுடன் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டு தீராத துயரத்தை அனுபவிக்க நேரிடும். எனவே நாம் முடிந்தவரை கோபத்தை தவிர்த்து இனிய சொற்களால் சூழ்நிலையை எதிர்கொண்டு நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வோமே.

-Victory king (VK)

No comments: