Saturday, February 22, 2020

ஆசை!

Status 141

மனிதன் ஒன்றை உணர்ச்சிபூர்வமாக நினைக்கும்போது அதில் ஒருவகை பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலால் ஆசை உண்டாகிறது. ஆசையால் கோபம் உண்டாகிறது. கோபத்தால் மயக்கம் வருகிறது. மயக்கத்தால் நினைவு தடுமாறுகிறது. பிறகு அறிவு கெட்டுப் போகிறது. அறிவு கெட்டுப் போவதால் அழிந்து விடுகிறான். ஆகவே இக்கொடிய குணமான ஆசை போக வேண்டுமானால் திருப்தி அதாவது போதுமென்ற மனம் அடை. கர்மத்தின் காரணமாக என்ன கிடைக்கிறதோ அதைக் கொண்டு திருப்தி அடை.

- ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா

அழிவிற்கு காரணமான ஆசையை அடக்கி இருப்பதை இன்பமுடன் ஏற்கும் பக்குவத்தை நாம் அடைந்தால் நமக்கு என்னாலும் நன்னாளே.                             

- Victory king (VK)

No comments: