Sunday, February 16, 2020

முக மலர்ச்சி

Status 135

சாதுவாக இருப்பவன் புன்னகையுடன் இருந்தால் அவன் சிரமங்களைக் கடந்து வந்து விட்டான் என்று பொருள். நமது முகம் மலர்ச்சியை இழந்தால் அது நம்முடைய சுய நம்பிக்கையை கெடுத்து விடும். நம்மை தளரச் செய்யும் பலவீனத்திற்கு வாசலைத் திறந்துவிடும். சிரித்து முகமலர்ச்சியுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். அதுவே வாழ்க்கைக்கு இனிமையையும், முயற்சிக்கு ஊக்கத்தையும் தரக்கூடியது.

- ஸ்ரீ அரவிந்தர்

அகத்தில் ஆயிரம் அழுத்தங்கள் இருக்கலாம். அதனை அடக்க மனதை திடப்படுத்த முயற்சிக்க  வேண்டும். அது அகத்தின் அழுத்தத்தை குறைக்கும். அதன் விளைவு நம் முகத்தில் பொலிவு ஏற்படும். அந்தப் பொலிவுதான் மற்றவரை ஈர்க்கும். எனவே மன திடத்தை வளர்த்துக் கொள்வோம். அனைவரையும் அரவணைப்போம்.  மகிழ்வோடு வாழ்வோம்

- Victory king (VK)

No comments: