Friday, January 31, 2020

அறிவின் பயன்

Status 120

எல்லா நூல்களையும் கற்றிருந்தாலும், கற்றவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி இருந்தாலும் தான்மட்டும் திருந்தாத வனாக ஒருவன் இருந்தால் அவனைவிட அறிவில்லாதவன் யாருமில்லை

-இந்து தர்ம சாஸ்திரம்

கற்க வேண்டிய நூல்களை குற்றமற கற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு கற்ற பிறகு கற்றபடி நடக்க வேண்டும். என்ற திருவள்ளுவரின் கூற்றுப்படி கற்றதினால் நமக்கு கிடைத்த அறிவின் கூர்மையை பயன்படுத்தாது நாம் பண்பற்ற வழியில் நடந்தால் நாம் கற்றதே விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடும். எனவே கற்றதினால் நமக்கு கிடைத்த அறிவின் பயனை முழுமையாக பயன்படுத்தி பண்போடு வாழ்வோம்.

-Victory king (VK)

No comments: