Wednesday, January 22, 2020

மனிதாபிமானம்

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைத் தற்று.
மன ஒற்றுமை இல்லாத வருடன் சேர்ந்து வாழ்வது, குடிசையுள் நாகப் பாம்புடன் வாழ்வது போன்றதாகும்.

- திருக்குறள் 890

சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல அக்கம்பக்கத்தில் உள்ள வீட்டில் மனிதாபிமான மே சிறிதும் இல்லாத மனித ஜென்மங்களுடனும், சுயநலவாதிகள் உடனும் வாழ்வது என்பது மிகவும் கடினம். அப்படிப்பட்ட சூழ்நிலை குடியிருப்பவர்களுக்கு வந்தால் வீட்டை மாற்றலாம். ஆனால் சொந்த வீட்டை வைத்திருப்பவர்கள் நிலை மிகவும் பரிதாபம் தான் விதியை நொந்து கொள்வதை விட வேறு வழியில்லை. இறைவனால் மட்டுமே இதற்கு பரிகாரம் கொடுக்க முடியும். அந்த நன்னாளை எதிர்நோக்கி வாழ்வோம்.

- Victory king (VK)

No comments: