Tuesday, January 7, 2020

நல்வினையும் தீவினையும்

கப்பலை மூழ்கடிக்க ஒரு சிறு ஓட்டையே போதுமானது. அதேபோல் மனிதனின் வாழ்வை கவிழ்க்க ஒரு சிறு தீய செயலே போதும்.

- இந்து தர்மசாஸ்திரம்


தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

தீயசெயல்கள் தீமையை விளைவிப்பதால், அத் தீய செயல்கள் தீயைவிட மிகையாக அஞ்சத்தக்கன.  (குறள் - 202)

என்ற வள்ளுவன் வாக்குப்படி நாம் நலமாக வாழ தீவினைகளை எண்ணத்தாலும் செயல்களாலும் தவிர்த்தும் எந்த தருணத்திலும் தீவினை செய்பவர்களுக்கு துணை போகாமல் இருந்தும் நம்மை நாம் பார்த்துக்கொள்வோம்.

- Victory King (VK) 

No comments: