Thursday, January 23, 2020

சார்ந்திருத்தல்!

Status 112

ஒருவரது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மற்றவரை அண்டி இருப்பதுதான் ஒருவரது அமைதியை இழப்பதற்கான முக்கியமான காரணமாகும்.

"பராதீனம் பிராண சங்கடம்"

பிறரை அண்டி இருப்பது என்பது துன்பம் தருவதுதான். சுதந்திரம் ஆனந்தம் அளிக்கும். எனவே தன் காலில் நிற்க முயலுங்கள். முடிந்தமட்டும் முயலுங்கள். மனப்பூர்வமாக முயன்றால் பல்வேறு துறைகளில் உங்களால் தன் காலில் நிற்க முடியும் என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

சுவாமி சிவானந்தா

நம்மால் முடியாத பொழுது ஒருவரை நாடி இருப்பதில் தவறில்லை. நாம் உடல் வலிமையுடன் இருக்கும் பொழுது அடுத்தவர் உழைப்பில் வாழ நினைத்தால் அதுவே பழக்கமாகி போய் விடும். அதன் பிறகு உழைக்க நினைத்தாலும் உடம்பு ஒத்துழைக்காமல் அவமானப்படும் நிலை தான் வரும். எனவே நம் உழைப்பின் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால் நலமாக மகிழ்வுடன் வாழ்வோம்.

- Victory King (VK)

No comments: