Saturday, January 25, 2020

பற்றற்ற மனநிலை!

Status 114

மண்ணாசை வளர்ந்துவிட்டால் கொலை விழுகிறது. பொன்னாசை வளர்ந்துவிட்டால் களவு நடக்கிறது. பெண்ணாசை வளர்ந்துவிட்டால் பாபம் நிகழ்கிறது. இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்ததது. பற்றற்று வாழ்வது என்றால் சன்னியாசி ஆவதல்ல. இருப்பது போதும் வருவது வரட்டும் போவது போகட்டும் மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

- கவிஞர் கண்ணதாசன்

நாம் நம் குடும்பத்தை நலமுடன் காக்க குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முழு முயற்சியுடன் முயன்று உழைத்து முன்னேற வேண்டும். தேவைக்கு மேல் ஆசைப்படும் பொழுதும் நாம் முயற்சிக்கலாம். அப்பொழுதுதான் பற்றற்ற நிலை வர வேண்டும். வாழ்வோம் வளமுடன்.

- Victory king (VK)

No comments: