Thursday, January 30, 2020

உண்மையின் மதிப்பு!

Status 119

இளமையும் அழகும் மறைந்துபோகும். ஆயுளும் செல்வமும் மறைந்துபோகும். பெயரும் புகழும் மறைந்துபோகும். மலைகளும் கூட உடைந்து தூளாகி விடும். நட்பும் அன்பும் மறைந்துபோகும். உண்மை ஒன்றே நிலைத்து நிற்கும்.

- சுவாமி விவேகானந்தர்

பாலில் துளி விஷம் கலந்து விட்டாலும் பால் முழுவதுமே விஷம் தான். அதுபோல் என்னதான் நாம் சொல்வதில் உண்மை இருந்தாலும் ஒரு பொய்யை சேர்த்து உரைக்கும் பொழுது முற்றிலும் பொய்யாக தான் போகும். அதில் உண்மைக்கு மதிப்பு இராது. பொய் சொல்வது என்று ஆரம்பித்து விட்டால் பொய்க்கு மேல் பொய் க்கு மேல் என்று போய் நம் வாழ்க்கையே பொய்யாகிவிடும். உண்மை ஒன்றுதான் எக்காலத்தும் நிலைத்து நிற்கும் ஒரு மகாசக்தி. எனவே எப்பொழுதும் உண்மையே பேசுவோம் உளம் மகிழ்ந்து வாழ்வோம்.

- Victory king (VK)

No comments: