Monday, January 27, 2020

நம்மை நாம் நம்புவோம்

Status 116

உனக்கு என்ன வேண்டும் என்று உன்னையே நீ வினவிக் கொள். மனநிறைவும் மகிழ்ச்சியும்தான் தேவை என்பது விளங்கிவிடும். இதுவே மனிதப் பிறவியின் பெரு நோக்கம். பிறரிடமிருந்தும் அல்லது எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராதே! எதிர்பார்த்தல் பெரும்பாலும் ஏமாற்றத்தில் தான் முடிகிறது. இந்த ஏமாற்றம் இன்ப ஊற்றை அடைத்துவிடும்.

- வேதாத்திரி மகரிஷி

நமக்கு வேண்டியதை நாமே முயன்று கிடைக்கும் பொழுதுதான் ஒரு முழுமையான மகிழ்ச்சி நமக்கு ஏற்படும். பிறரை நாம் எதிர்பார்க்கும் பொழுது நமக்கு வேண்டியது கிடைக்காவிட்டால் நமக்குள் ஒரு விரக்தியும் அடுத்தவரிடம் விரோதமும் தான் மிஞ்சும். நம்மை நாமே நம்புவோம் மகிழ்வோம்.

- Victory king (VK)

No comments: