Saturday, January 18, 2020

இறை அருளை வளர்த்துக்கொள்வோம்!

அதோ கூப்பிடு தொலைவில் இளைப்பாற இடம் இருக்கிறது என்று தெரிந்தால் தலைச்சுமை பாரமாக தெரியாது. இளைப்பாறும் இடம் தொலைவில் இருக்கிறது என்று தெரியவந்தால் சுமை கனக்க ஆரம்பித்துவிடும்.
உண்மையில் சுமக்கிற பாரம் ஒன்றுதான் என்றாலும் நாம் இளைப்பாற முடியும் என்கிற உணர்வவே ஆறுதலையும் உற்சாகத்தையும் தரும். நாம் புது தெம்பு பெறுவோர் ஆவோம்.

-ஸ்ரீராமகிருஷணர்

நாம் ஒரு நல்ல செய்தி எதிர் நோக்கும் பொழுது அந்த காலம் வரும் வரை மகிழ்ச்சியாக இருப்போம். தீவினை நம்மை வந்து  அடையும் என்று தெரிந்தால் அதன் தாக்கமே நம்மை வேதனைக்கு உள்ளாக்கி விடும். எனவே நடப்பது அனைத்தும்இறைவன் அருளே என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.

-Victory king (VK)

No comments: