Monday, March 9, 2020

அகமும் புறமும்

Status 155

ஒரு மனிதனை வெளித்தோற்றத்தை மட்டும் கண்டு நல்லவன் என்றோ தீயவன் என்றோ உறுதி செய்து விடாதே. பலாப்பழம் முள் முள்ளாக மேலே தோற்றமளிக்கும். உள்ளுக்குள் சுவையுள்ள சுளைகள் பல உண்டு. எட்டிப்பழம் மேலே பளபளவென்று இருக்கும். தொட்டாலே கசக்கும். நாவற்பழம் கருமை. ஆனால் நாவில் பட்டால் இனிக்கும். பாம்புக்குட்டி பளபளவென்று இருக்கும். கொடிய விஷத்தை தரும். அம்பு நேராக இருக்கும். உயிரை குடிக்கும். எனவே மனிதனை புறத்தோற்றத்தை வைத்து மதிப்பிடாதே.

- திருமுருக கிருபானந்த வாரியார்

நல்லவனை விட, நல்லவன் போல் நடித்து மற்றவர்களை ஈர்க்கும் வல்லவர்களின் செயல்பாடுகள்தான் தத்ரூபமாக காட்சியளிக்கும். எனவே அதனை இனம் கொண்டு நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும்

-Victory king (VK)
.

No comments: