Status 150
துரோகத்திற்கு
ஒரு சிறந்த பழமொழி. ‘வேலியே பயிரை
மேய்ந்தால்’. பாதுகாக்க வேண்டியவர்களே துரோகம் செய்தால் அதைவிட
பெரிய பாவம் ஒன்றுமில்லை. நெருங்கிய
நண்பர்கள் போல் நடித்து நம்மை
நட்டாற்றில் விடுவது, நம் கூடவே இருந்து
நமக்கே குழி பறிப்பது, அறிவுரை
கூறுவது போல் நம் மனதில் நஞ்சை ஊட்டுவது,
விரோதிக்கு விரோதி நண்பன் என்ற என்ற
பாணியில் துரோகிகளுடன் சேர்ந்து அடுத்தவர்களை அழிக்க நினைப்பது, அதைவிடக்
கொடுமை பெற்ற பிள்ளைகளே பெற்றோர்களுக்கு
செய்யும் துரோகம், பெற்றோர்களே பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம் அனைத்துமே துரோகத்தின்
உச்சம். நாம் இதன் மூலம்
பாவத்தைத் தான் சம்பாதிக்கிறோம் என்பதை
மனதில் கொண்டு இதுபோன்ற தீய
செயல்களில் ஈடுபடாது இருந்தால் வாழ்க்கை
சிறக்கும்
என்பதுடன் நம் குடும்பம் செழிக்கும்.
Victory king (VK)
No comments:
Post a Comment