Friday, March 6, 2020

அறிவுரை

Status 153

காரணத்துடன் மட்டும் பேசுங்கள். எல்லாவிதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள். அளந்ததே பேசுங்கள். களங்க மற்ற நல்ல நோக்கம் கொண்ட வார்த்தைகளே சிலவேளைகளில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பிரிவை உண்டாக்குகின்றது. எதிலும் எவருக்கும் புத்திமதி சொல்ல போகாதீர்கள் நீங்கள் கேட்கப்பட்டாலன்றி. நாம் நமது வேலையை பார்ப்போம்.

- சுவாமி சிவானந்தா

அறிவுரை என்ற பெயரில் அதிகப் பேச்சு ஆபத்தை விளைவிக்கும். உணர்ச்சிவசப்பட்டு  பேச்சில் தடுமாற்றம் ஏற்படுவதுடன் அடுத்தவர் மனதை
 புண்படுத்தும் நிலையும் வரலாம். எனவே நிதானத்துடன் பேசி நம் நாவைக் கட்டுப்படுத்தி நம் பண்பை காப்போம்.

- Victory king (VK)

No comments: