Friday, March 6, 2020

நம் மதிப்பு!

Status 152

தாழம்பூ மடல்களிலே பெரியதாக இருக்கிறது. ஆயினும் மிகச்சிறிய மலரான மகிழம்பூ மனத்தில் இனியதாக இருக்கிறது. சமுத்திரம் பெரியதா எனும் அதிலுள்ள நீர் உடல் அழுக்கை போக்குவதற்கு தக்க நீர் ஆகாது. அதன் அருகேயுள்ள சிறு ஊற்று நீர் உண்பதற்கு உகந்த நீராக  இருக்கிறது. எனவே உருவத்தால் சிறியவர் என்றாலும் அவரை மதிக்காமல் இருக்க வேண்டாம்.

- ஔவையார்

எளியவர் ஆயினும் ஏழ்மையில் இருந்தாலும் நம்மிடம் வேலை செய்யும் கூலித் தொழிலாளியானாலும் அனைவரையும் மனிதாபிமானத்தோடு நடத்துவதுதான் பண்பு. நம்முடைய மதிப்பைக் காப்பாற்றிக்கொள்ள நாம் இதை உணர்ந்தால் போதும்.

- Victory king (VK)

No comments: