Status - 168
இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொன்னாலே முழு நாமாவளியை படிப்பததின் பலன் கிடைக்கும்.
‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்’ என்று
தொடங்கும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை
கேட்டாலே ஒரு வித பரவசம்
ஏற்படும். விஷ்ணு சஹஸ்ர நாமம்
ஒலிக்கும் இடத்தில் மங்களம் உண்டாகும். துர்தேவதைகள்
அலறியடித்து ஓடும். நோய்நொடிகள்
விலகும். வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும்.
எனவே நம் வீடுகளில் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை ஒலிக்கச் செய்வதன் மூலமும், முடிந்தால் நாமே
படிப்பதின் மூலமும் சகல செளபாக்கியங்களுடன் வாழ்வோம். மேலும் நம்மை எந்த வித தொற்று
நோயும் அண்டவிடாது பாதுகாக்கும். இதனை யார் வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் கேட்கலாம்,
படிக்கலாம்.
'ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ
ரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே'
இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொன்னாலே முழு நாமாவளியை படிப்பததின் பலன் கிடைக்கும்.
– ஸ்ரீகாஞ்சி மகா பெரியவரின் அருளுரை
இன்றைய சூழ்நிலையில் ஸ்ரீகாஞ்சி பெரியவரின் அருளுரையை மனதார ஏற்று பலனடைவோமே!
– Victory King (VK)
No comments:
Post a Comment