Friday, March 13, 2020

இன்பமும் துன்பமும்!

Status 159

இன்பத்தைப் போலவே துன்பமும் மனித வாழ்க்கைக்குத் தேவைதான். துன்பப்படும் போது தான் நல்ல மனிதன் நன்றாக கற்றுக் கொள்கிறான். ஆகையால் சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக நீ இந்த உலகத்தில் உனக்காக ஒதுக்கப்பட்டுள்ள துன்பத்தை ஏற்றுக் கொள்ள உன்னை ஆயத்தப்படுத்திக் கொள். இதனால் திடீரென்று வரக்கூடிய துன்பத்தை  உன்னால் தாங்கிக் கொள்ள முடியும்.

-இந்து தர்ம சாஸ்திரம்

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. நாம் இன்பத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தால் நம்மை அகந்தை தான் ஆட்டிப்படைக்கும். நிழலின் அருமை கொளுத்தும் வெயிலில் இருந்து வருபவர்களுக்குத்தான் தெரியும். இன்பத்தின் அருமை துன்பத்திலிருந்து விடுபடும் போதுதான் உணரமுடியும். எனவே நாம் எதற்கும் தயாராக நம் மனதை பக்குவப்படுத்தி வாழ்ந்தால் நம் வாழ்வு சிறக்கும்

-Victory king (VK)

No comments: