Thursday, March 12, 2020

வாழ்தல் இனிது!

Status 158

சாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்த காலத்தில் சாத்தியமே இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. வியாபார வேகத்தில் வளர்ந்துவிட்ட லெளகீக நாகரீகத்தை விட்டு விட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண்டால் யாருமே இப்படி ஆசாரங்களை விட்டுப் பணத்துக்காக பறக்க வேண்டியதில்லை. பணத்துக்காக பறக்காத போது பகவத் ஸ்மரணத்திற்கு நிறைய அவகாசம் கிடைக்கும்.வாழ்க்கையில் நிம்மதியும், திருப்தியும், சௌக்கியமும் தன்னால் உண்டாகும்.

- ஸ்ரீ காஞ்சி பெரியவர்

அதாவது  மேலும் மேலும் ஆசைகளை வளர்த்துக் கொண்டு  நம்மை நாமே வருத்திக் கொள்ளாமல் வாழ்ந்தால் மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். முயற்சித்து  நம் சக்திக்கேற்ற தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு நமக்கு கிடைத்ததை வைத்து மகிழ்வுடன் வாழ்ந்தால் வாழ்வே சுகம் தான்.

- Victory king (VK)

No comments: