Wednesday, March 4, 2020

பரோபகாரமும் பர அபகராமும்

Status 151

அவனவனும் தன் உடலையும், புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொள்வதே பெரிய பரோபகாரம். துர்பழக்கங்களால் ஒருவன் வியாதியைச் சம்பாதித்துக் கொள்கிறான் என்றாள் அப்புறம் அவனால் எப்படி பரோபகாரம் பண்ண முடியும். அதுமட்டுமல்ல. அவனது நோய் மற்றவர்களுக்கும் பரவக்கூடும். துர் பழக்கத்தால் நோயை வரவழைத்துக் கொள்வது பர அபகாரம் ஆகும். நம்மை மீறி வந்தால் அது வேறு விஷயம்.

- ஸ்ரீ காஞ்சி பெரியவர்

புத்தியை சுத்தமாக வைத்துக்கொண்டால் நம்மை தீய எண்ணங்கள் அண்டாமல் நேர்வழியில் கொண்டுசெல்லும்.அதுபோல் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டிய பழக்கவழக்கங்களை நாம் கடைபிடிப்பதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தைப் பேணி காப்பதுடன் மற்றவர்கள் நலனையும் காப்பாற்றுகிறோம் என்பதை மனதில் கொண்டு சுகாதார செயல்பாடுகளிலிருந்து மீறாமல் வாழ்வோம்

-Victory king (VK)

No comments: