Thursday, March 19, 2020

சாஸ்த்திரங்கள்!

Status 165
வீட்டில் முதலில் இருப்பது 'படி'.
இது நம்மை படிக்கவேண்டும் என்று கூறுகின்றது. இரண்டாவதாக அமைவது' நிலை.' படித்து அதன்படி நிற்க வேண்டும். அடுத்து 'நடை.' நாம் படித்த படி நடக்க வேண்டும் என்று கூறுகின்றது. அடுத்து 'கூடம்.' அது கூடி வாழ வேண்டுமென்று அறிவுறுத்துகின்றது. அதன் பக்கத்தில் 'முற்றம்.'லக்ஷியம் முற்று பெற்றால் மோக்ஷம் கிட்டும். முற்றம் முடிந்ததும் காண்பது 'வெளி.' இதுவே 'வீடு பேறு’ என்பதாகும்.

ஹிந்து தர்ம ஞானம்

இன்று நாம் வாஸ்து என்று கொண்டாடப் பெற்று கட்டிய வீடுகளில் வாழ்ந்து மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் அந்த காலத்திலேயே சாஸ்திர ரீதியாக வீடுகளை அமைத்து சுபிட்சமாக வாழ்ந்தார்கள். அன்றைய சாஸ்திரங்கள் தான் இன்று வாஸ்துவாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நாம் மாற்றங்களோடு வாழ்ந்தாலும் சாஸ்திரங்கள் மறுப்பதில்லை.

-Victory king (VK)

No comments: