Wednesday, March 11, 2020

தீவினையும் நல்வினையும்

Status 157

நீரிலுள்ள அல்லிமலரானது நீரினது மட்டத்தின் உயரத்தின் அளவாக இருக்கும். கூரிய அறிவானது தான் கற்ற நூல்களின் அளவே ஆகும். தான் அடைந்த செல்வமானது முற்பிறப்பில் செய்த தவத்தின் அளவாகவே இருக்கும்.

- ஔவையார்

நாம் முழுமனதுடன் முயற்சித்தால் மட்டுமே முன்னேற முடியும். நற்செயல்களை செய்தால் மட்டுமே நன்மை அடைய முடியும். எனவே நம் செயல்களுக்கு ஏற்பத்தான் நம் வாழ்க்கைப் பயணம் தொடரும் என்பதை மனதில் கொண்டு தீவினை அகற்றி நல்வினை செய்து வாழ்ந்தால் நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்

-Victory king (VK)

No comments: