Sunday, March 29, 2020

ஊரடங்கும் நம் பாதுகாப்பும்!

Status 175

எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். உங்களுக்கு தாங்கவே முடியாது என்ற துன்பம் வந்தால் கூட அதனைப் பொறுத்து கொஞ்சம் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கடந்த காலம் பற்றியும், எதிர்காலம் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். இன்று என்பது மட்டுமே நிஜம். இன்றைய பொழுதை முழுமையாக வாழ பழகுங்கள்.

- சுவாமி விவேகானந்தர்

எனவே இன்றைய இக்கட்டான உள்ளிருப்பு நிலையை முடிந்தவரை சந்தோஷமாக சமாளியுங்கள். இந்த மூன்று வாரங்களை மூன்று நாட்களாக எண்ணி மகிழ வேண்டும் என்றால் நாம் குடும்பத்தோடு மகிழ்வுடன் இருக்க இது ஒரு சந்தர்ப்பம் என்று எண்ணுங்கள். நிலைமையை சமாளிக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் கூர்ந்து கவனித்து ஆறுதல் அடையுங்கள். தன்னுயிரையும் பொருட்படுத்தாது அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களையும், காவல்துறையும் மானசீகமாக மனதார வாழ்த்தி மகிழுங்கள். நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர முடியும்.

-Victory king (VK)

No comments: