Monday, March 2, 2020

தொண்டின் இலக்கணம்

Status 149

தாய், தந்தை, சகோதரன், மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் உலகுக்கு உபகாரம் செய்கிறேன் என்றால் அது வெளி வேஷம் தான். அது போலித்தனம். மோசடி தனம். எல்லோரிடமும் அன்பாக இரு என்பது தொண்டின் இலக்கணம்.

- ஸ்ரீ காஞ்சி பெரியவர்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல், தகுதி இல்லாமல் தன்னை உடை அலங்காரத்தால் மிகைப்படுத்தி மற்றவரை ஈர்த்தல், தன் வாய் சாதுரியத்தால் பொய்யான விஷயங்களை உண்மைபோல் சித்தரித்து அடுத்தவனை ஏமாற்றி பிழைத்தல், நல்லவன் போல் நாடகமாடி தன் வீட்டிலும் வெளியிலும் தன்னை பிரபலப்படுத்திப் பிழைத்தல் இவைகள் அனைத்தும் நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சூனியம்போல் ஆகும். எனவே நாம் நேர்மையாக நடப்பதோடு இது போன்ற ஆட்களை இனம் கொண்டு நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு வாழ்வில் நலம் பெற வேண்டும்

-Victory king (VK)

No comments: