Friday, March 27, 2020

சுயகட்டுப்பாடு!

Status - 173

மூன்று பொருட்களை மிச்சமாக வைக்கக் கூடாது.

1. அக்கினி சேஷம் 2. ருணசேஷம்3. சத்ரு சேஷம் 

வீட்டில் இரவில் நெருப்பை மிச்சமின்றி அணைக்கவேண்டும். இல்லையேல் எலி முதலிய பிராணிகள் துணிகளை இழுத்து விடும். அதனால் தீப்பிடிக்கும்.
கடன் முழுவதும் தீர்த்துவிட வேண்டும். ஒரு சிறிது மிச்சமாக விட்டு வைத்தாலும் வட்டி குட்டி போட்டு பெருகிவிடும். பகைவனை அடியுடன் அழிக்க வேண்டும். இல்லையேல் அவன் பலரை உடன் கூட்டிக்கொண்டு பெருகி விடுவான்.

- திருமுருக கிருபானந்த வாரியார்

அதுபோல்தான் தற்பொழுது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடிய வைரஸை அறவே ஒழித்திட வேண்டும். நாம் சுய கட்டுப்பாட்டை இழக்காமல் இருந்தால், பொது நலனில் உண்மையான அக்கறை இருந்தால், இதற்காக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் இக்கட்டான இந்த சூழ்நிலையிலிருந்து நாம் விடுபடுவோம் என்பது உறுதி.

-Victory king (VK)

No comments: