Wednesday, April 1, 2020

கோபம்!

Status 178

கோபத்தில் இரண்டு வகை. நல்ல கோபம். கெட்ட கோபம். கெட்ட கோபம் தன்னையும் பாதிக்கும், பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் நல்ல கோபம், பிறர் நல்லவற்றில் ஈடுபட, திருத்த உதவும். கோபப்படுபவர் உறவினர், நண்பர்களை இழக்கிறார்கள். கோபத்தை நல்ல பாம்பினைப் போல் கையாளவேண்டும். அதாவது நல்ல பாம்பு கூட சாதுவாய் இருந்தால், பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். ஆனால் அது சீறினாலே போதும்.
அதுபோன்று கோபத்தைக் கையாள வேண்டும்.

- ஸ்ரீ இராமகிருஷ்ணர் 

நாம்எதற்கெடுத்தாலும் கோபப்பட்டால் நமக்கு மதிப்பில்லாமல் போய்விடும். எனவே அறிவுரையோடு சேர்ந்த கோபமும், அன்போடு சேர்ந்த கோபமும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும். ஒருவரை திருத்த நாம் காட்டும் கோபம் அவரை பயமுறுத்தி தெளியவைக்கும். இதுதான் இன்றைய காவல்துறையின் நிலை.

- Victory king (VK)

No comments: