Thursday, April 9, 2020

நிலையான செல்வம்

Status - 185

ஔவை பலர் வந்து
அறிச்சுவடி தந்தாலும்

வள்ளுவன் நேரில் வந்து
வாய்மொழியே தந்தாலும்

காதருந்த ஊசியும்
கடைசி வரை வாரா என
பட்டினத்தார் சொன்னாலும்

அரசனும் ஆண்டியும்
ஆவி போன பின்னர்
கைப்பிடி சாம்பல் என்று
அறநூல்கள் சொன்னாலும்

அச்சடித்த பச்சை நோட்டை
தேடாதார் எவரும் உண்டோ

- தமிழ் கவிதை

பணத்தை நோக்கி நாம் அலையக்கூடாது. அப்படி வரும் பணம் நிலையில்லாதது. பணம் நம்மை நோக்கி வர வேண்டும். நம் உழைப்பால் வரும் பணம்தான் நம்மை  நோக்கி வருவது. இது நிலையானது. எனவே நேர்வழியில் உழைத்து நம் வாழ்வை வளம் பெறச் செய்வோம்.

Victory king (VK)

No comments: