Saturday, April 25, 2020

உண்மையும் தியாகமும்

Status 201

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்துவிடாதீர்கள்.

-சுவாமி விவேகானந்தர்

உண்மை பேசுவது என்பது ஒரு உன்னதமான புனிதமான செயல்.
உண்மை ஒரு நிரந்தரமான முழுநிலா. இதயத்திற்கு இதமளிக்கும்.
உண்மையின் உயர்வு ஓர் கோபுர கலசம். உண்மை என்றும் வற்றாத ஜீவ நதி. ஆழ்மனதில் இருந்து வருவது தான் உண்மை. எனவே அது அழியாதது. அமைதியை கொடுக்கும். என்றும் நிலைத்து நிற்கும். உண்மை உறங்கிவிட்டால் பொய் தன் ஆட்டத்தை ஆரம்பித்து விடும். எனவே எப்பொழுதும் உண்மையையே பேசி நன்மையே செய்து நலம்பெற வாழ்வோம்.

- Victory King (VK)

No comments: