Thursday, April 16, 2020

நம்பிக்கையும் துரோகமும்!!!

Status 192

உன்னை நம்புகிறவர்களுக்கு நீ நம்பத் தகுதியுள்ளவனாய் இரு. உன்னை நம்புகிறவர்களை நீ ஒருபோதும் ஏமாற்ற நினையாதே. திருடுவதைப் பார்க்கிலும் நம்பினவர்களை ஏமாற்றுவது கொடுமையாகும்.

- இந்து தர்ம சாஸ்திரம்

ஒருவர் செய்யும் நம்பிக்கை துரோகம் அது அவரது சாமர்த்தியம் என்று பெருமைப் பட வேண்டாம். அது அவர் அடுத்தவருக்கு செய்யும் வஞ்சனை.  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல், நம் கூடவே இருந்து நமக்கே குறிப்பறித்தல் போன்ற செயல்கள் வஞ்சத்தின் உச்சம். பாம்பாட்டிக்கு பாம்பினால் தான் சாவு என்று கூறுவார்கள். அதுபோல நம்பிக்கை துரோகிகளுடன்  நாம் தொடர்பு வைத்துக் கொண்டால் நம்மை முழுவதுமாக நசிக்கி விடுவார்கள். எனவே இனம் கொண்டு நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்

- Victory king (VK)

No comments: