Tuesday, April 14, 2020

பெருமைமிகு பெற்றோர்

Status 190

நல்லறிவு இல்லாமல் நெஞ்செல்லாம் அச்சமே நிரம்பி நிற்கும் அற்ப குணம் உள்ள குழந்தைகளைப் பெறுவதைக் காட்டிலும் அக் குடியில் தோன்றிய ஒருவன் எங்களுக்குப் பின் வாரிசு ஒருவரும் இல்லை என்று பெருமையோடு கூறிக் கொள்ளுதல் நலமாகும்.

- வெற்றி வேற்கை

ஒருவருக்கு குழந்தைச் செல்வம் கிடைப்பது என்பது ஒரு பெரும் பாக்கியம். அப்படி கிடைக்கப்பெற்ற குழந்தைகள் நல்லவனாவதும் தீயவனாவதும் பெற்றோர்கள் கையில்தான்.  பிள்ளைகள் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் பாசத்திற்கும் நேசத்திற்கும் அடிமையாகி பயப்படாமல் அவர்களை நெறி தவறாமல் வாழ வழிவகுக்கும் பெற்றோர்களே  பெருமைக்குரியவர்கள்.

- Victory king (VK)

No comments: