Thursday, April 2, 2020

நம்பிக்கை

Status 179

நம்பிக்கை இழத்தல் ஒருபோதும் முன்னேற்றத்திற்கு தேவையானது அன்று. அது பலவீனத்திற்கு அடையாளம். மனம் என்பது ஒரு பாலிஷ் செய்யப்பட்ட நிலைக்கண்ணாடி. அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும் தூசு படியாமல் வைத்துக்கொள்வதும் நமது தொடர்ச்சியான பணி.

- ஸ்ரீ அன்னை

நாம் தன்னம்பிக்கையுடன் இருந்தால்தான் எல்லா கஷ்டங்களையும் எல்லா சூழ்நிலைகளிலும் ஊக்கத்தை இழந்துவிடாமல் மனம் உடைந்து போகாமல் எதிர்த்து நிற்க முடியும். எனவே இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இந்த மனப்பக்குவத்தை நாம் மேற்கொண்டு செயல் வடிவம் கொடுத்தால் நம்மை காப்பாற்றிக் கொள்வதோடு அனைவரது நலனையும் காக்க முடியும்.

- Victory king (VK)

No comments: