Wednesday, April 22, 2020

பொறுமையின் மகிமை

Status 198

ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனி தருகிறது!

இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது.

- அரிஸ்டாட்டில்

"பதறிய காரியம் சிதறும்"எந்த ஒரு செயலையும் பொறுமையோடு நிதானமாக செய்யும்பொழுது வெற்றி என்பது நிச்சயம். பொறுமை கடலினும் பெரிது. வேகம் விவேகம் அல்ல. இவற்றை வாழ்க்கையில் பின்பற்றி அனைத்திலும் வெற்றி பெறுவோமே

-Victory king (VK)

No comments: