Friday, April 10, 2020

துஷ்டரைக் கண்டால் தூர விலகு!

Status 186

தலையில் கொம்புள்ள ஆடு, மாடு போன்ற விலங்கினங்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஐந்து முழ தூரத்திற்கு அப்பால் விலகி நிற்க வேண்டும். குதிரையாயின் பத்து முழ தூரத்திற்கு அப்பால் விலகி நிற்க வேண்டும். கோபம் மிகுந்த யானையாயின் ஆயிரம் முழம் தள்ளி நிற்க வேண்டும். ஆனால் வம்பையே தொழிலாகக் கொண்ட தீய மக்களுடைய கண்களுக்குத் தெரியாதபடி வெகுதூரம் தள்ளி சென்று விடுவதே நல்லதாகும்.

நீதி வெண்பா

துஷ்டரைக் கண்டால் தூர விலகி விடுவதுதான் சாலச்சிறந்தது.நியாயம் நேர்மை, தர்மம் என்று அவர்களிடம் பேசி எந்தவித பிரயோஜனமும் இல்லை. அவர்களிடமிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி அவர்களிடமிருந்து விலகி இருப்பது ஒன்றுதான்.

Victory king (VK)

No comments: