Wednesday, April 15, 2020

ஒட்டும் உறவும் நட்பும்

Status 191

"ஒட்டி உறுவார் உறவு". துன்பம் வந்த காலத்தே கைவிட்டு செல்பவர்கள் நமக்கு ஒருபோதும் உறவினர் அல்லர். அவர்களை உறவினர் என்று கருதுதல் கூடாது. துன்ப காலத்திலும் நம்முடன் இணைந்து நட்புடன் இருப்பவர்களே நமக்கு உறவினர். அத்தகையவர்களையே உறவினராகக் கருதவேண்டும்.

- வாக்குண்டாம்

நாம் கல்வியில் மேம்பட்டு இருக்கலாம், செல்வச் செழிப்பிலும் மிகுந்து இருக்கலாம், புகழின் உச்சியில் கூட இருக்கலாம். அந்த நிலையிலும் நாம் ஒருவரிடம் காட்டும் நட்பானது எந்த விதத்திலும் தொய்வில்லாமல் தொடர்வதுதான் நிலையான, உண்மையான, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நட்புக்கு உதாரணமாகும். எனவே உயர் நட்போடு பழகுவோம் உறவுகளை வலுப்படுத்துவோம்.

- Victory king (VK)

No comments: