Monday, April 20, 2020

அச்சம் தவிர்ப்போம்


Status 196

அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது, கேட்டை விளைவிப்பது, மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.

-சுவாமி விவேகானந்தர்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

என்ற பாரதியின் கூற்றை மனதிற் கொண்டு எந்த நிலையிலும் எதற்கும் அச்சமின்றி செயல்பட்டு நற்செயல்களில் வெற்றி காண்போம்.

-Victory king (VK)

No comments: