Saturday, May 16, 2020

தர்மத்தின் தாத்பர்யம்!

Status 222

கடலில் பெய்யும் மழை, பகலில் எரியும் தீபம், வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு அனைத்தும் பயனற்றது.

- சாணக்கியர்

பகட்டுக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள தன் பணப் பெருமையை காட்ட மற்றவர்களுக்கு உதவி செய்வது போல் காட்டும் மாயை என்றாவது ஒரு நாள் வெளிச்சம் போட்டு காட்டி விடும். இக்கட்டான நிலையில் தவிப்பவர்களுக்கு தக்க சமயத்தில் செய்யும் உதவியும், வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு உடைகள் கொடுத்து உதவுவதும், ஏற்ற தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் பழகுவதும் தான் சாலச் சிறந்த தர்மமாகும்.

- Victory king (VK)

No comments: