Tuesday, May 12, 2020

தன் குறை உணர்தல்!

Status 218

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.

மகாத்மா காந்தி

குறை கூறுதல் என்பது ஒரு தொற்று நோய். தன் குற்றத்தை மறைப்பதற்கு ஒரு வடிகால் மற்றவர் குற்றங்களை அலசி மகிழ்வது தான் தார்மீகப் பொறுப்பற்றவர்களுக்கு ஒரு எளிய வழி. மற்றவர்களை மட்டம் தட்டி தங்களை உயர்த்திக் கொள்ளும் சுய நாடகம் தான் அது. மற்றவர்களை குறை கூறுவது என்பது நம் ரத்தத்தில் சிறுவயதிலிருந்தே ஊறிப்போன ஒன்றாகும். நாம் கல்லில் தடுக்கி விழுந்து விட்டால் கல்லைத் தானே திட்டுகிறோம். நாம் எப்பொழுது நம் குறைகளை உணர்கிறோமோ அப்பொழுதுதான் நாம் தெளிவு பெறுவோம். எனவே நம் குறைகளை களைவோம் நலமாக வாழ்வோம்.

Victory king (VK)

No comments: