Monday, March 1, 2021

நடப்பது அனைத்தும் ஒரு காரணத்துக்காகவே!

 Status 2021 (59)

எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.

பகவத் கீதை

நமக்கு நல்லது நடக்கும் பொழுது இயல்பாகவே நாம் மகிழ்கிறோம். அதேபோல் துன்பம் வரும் பொழுதும் எதோ நமக்கு ஒரு பெரிய இடர்பாடு வருவதை சுட்டிக் காட்டுவதாக எண்ணி எதிர்கொண்டு சமாளிக்க ஆயத்தமாகி விட்டால் அதில் நம் கவனம் திரும்பி துன்பத்தின் சுமை குறையும் வாய்ப்பு உண்டு. இதன் மூலம் துன்பத்தின் வேகம் குறைந்து நம் மனதிற்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். எனவே துன்பத்தைக் கண்டு மிரளாமல் மன அமைதியுடன் அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தை அடைந்து நம்மை நாம் காத்துக் கொள்வோமே!

Victory King ((VK)

No comments: