Tuesday, March 9, 2021

எல்லையைத் தாண்ட வேண்டாமே!

 Status 2021 (67)

நாம் நம் எல்லையைத் தாண்டாத வரையில் நம் வாழ்க்கையும் நன்றாக அமைதியாக இருக்கும். எல்லையைத் தாண்டும் பொழுது தான் நம் நிலையிலிருந்து தடுமாறி அடுத்தவனை அழிக்கலாமா அடுத்தவன் குடியைக் எடுக்கலாமா என்ற எண்ணம் மேலோங்கி இறுதியில் நம்மை நாமே அழித்துக் கொள்ளும் நிலை வந்துவிடும். நான் என்ற எண்ணம் நமக்கு தலைக்கு ஏறி ஆட்டம் போடும் பொழுது தான் நாம் எல்லையைத் தாண்டுகிறோம். கடல் தன் சீற்றத்தால் எல்லையை தாண்டும் பொழுது நிலம் அழிகிறது. ஆனால் நாம் அகந்தையால் நம் எல்லையை தாண்டும் பொழுது நாமே அழிந்து விடுகிறோம் கடல் சீற்றத்தை நாம் அடக்க  முடியாது. இயற்கை. ஆனால் நம் அகந்தையை நாம் நினைத்தால் அடக்கி நலமாக வாழமுடியும். முயற்சித்து தான் பார்ப்போமே!

Victory King (VK)

No comments: