Saturday, March 27, 2021

உண்மையும் பொய்யும்!

 Status 2021 (85)

பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே. உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். ஏனென்றால் பொய் வாழ விடாது. உண்மை சாக விடாது.

விவேகானந்தர்

தவறு செய்வது மனித இயல்பு. தவறை நாம் உணரும் பொழுது உண்மையைச் சொல்லி நாம் மாட்டிக் கொண்டாலும் திருந்தி வாழ்வதற்கு அதுவே ஒரு மருந்தாக அமையும். ஆனால் தவறை தவறே இல்லை என்று சாதித்து தவறுக்கு மேல் தவறு செய்பவர்கள் தன் வாழ்க்கையையே பொய்யாக்கி கொள்வதுடன் தன்னைத்தானே அழித்துக் கொள்கின்றனர். எனவே உண்மைக்கு மருந்து தவறை உணர்ந்து திருந்துதல். பொய் என்பது ஒரு புரையோடிப்போன மருந்திற்கு அடங்காத புற்றுநோய் என்பதை நாம் நன்கு உணர்ந்து உண்மைக்கு உயிர் கொடுப்போம்

Victory King (VK)

No comments: