Thursday, March 25, 2021

பிரச்சனைகளும் தீர்வுகளும்!

 Status 2021 (83)

மழை வந்துவிட்டால் பறவைகள்  அதனுடைய கூட்டிற்குள் சென்று அடைந்து விடும். ஆனால் கழுகு மட்டும் மேகத்திற்கு மேலே பறந்து தன்னை மழையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும். அதுபோல ஒரு பிரச்சனை என்று  வந்துவிட்டால் அதனை அவரவர்கள் சக்திக்கு ஏற்பவும் திறனுக்கு ஏற்பவும் செயல்பட்டு அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடவேண்டும். பறவைகளுக்கே அப்படிப்பட்ட ஞானம் இருக்கும்பொழுது ஆறறிவு பெற்ற நாம் எதனையும் முறையாக சிந்தித்து சரியான பாதையில் செயல்பட்டால் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து நம்மால் விடுபட முடியும். எனவே பிரச்சனையை கண்டு முடங்காமல் சிந்திப்போம் செயல்படுவோம் வெற்றி பெறுவோம்.

Victory King (VK)

No comments: