Friday, March 26, 2021

சொந்த பலத்தில் முன்னேறுவோம்!

 Status 2021 (84)

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது!

கண்ணதாசன்

ஒருவர் இருக்கும் தகுதியைப் பொறுத்துதான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. நலிந்தோரின் பின்னால் வலியோர் கூட்டம் ஒன்று சேர்ந்து விட்டால் நலிந்தோர் தன் பின்புல பலத்தின் தைரியத்தில் தலைகால் புரியாமல் ஆட்டம் போடுகிறார்கள். ஒரு நிலையில் பின்பலம் தன்னை விட்டு விலகும் பொழுது மற்றவர்களால் மிதிபட்டு சாகிறார்கள். எனவேதான் தகுதியறிந்து பழக வேண்டும் தன் பலத்தில் வாழ வேண்டும் என்பது. இல்லையேல் சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பின் நிலைதான். சிந்தித்துப் பார்ப்போம் சொந்த பலத்தில் வாழ்வோம்!

Victory King (VK)

No comments: