Wednesday, March 10, 2021

மகிழ்வுடன் வாழ...

 Status 2021 (68)

நாம் செய்த தவறுக்கு மனம் உருகி வருந்தி நம்மை வருத்திக் கொண்டு திருந்தி வாழலாம். ஆனால் மற்றவர்கள் நமக்கு செய்த துரோகத்திற்கு நாம் அதை நினைத்து நினைத்து வருந்தி நம் உடலை கெடுத்துக் கொள்வதால் நமக்குத்தான் கஷ்டமே ஒழிய அது தீர்வாகாது. நமது மன விரக்தி விரோதிகளுக்கு சாதகமாகவும் அமைந்துவிடும். எனவே துரோகியை கையாள்வது எப்படி என்பதை நன்கு யோசித்து இறைவனிடம் சரணடைந்து மனம் உருகி வேண்டினால் மன அமைதியும் கிடைக்கும் துரோகிகளின் செயலுக்கு நமக்கு பரிகாரமும் கிடைக்கும். துரோகிகளுக்கு சரியான தண்டனையும் கிடைக்கும். எனவே சிந்தித்து செயல்பட்டு இடர்பாடுகளில் இருந்து விடுபட்டு மகிழ்வுடன் வாழ முனைவோம்.

Victory King (VK)

No comments: